எண்ணை நீராடுதல் (சம்பந்திமார் விருந்து)
- பதினாறு அல்லது முப்பத்தொரு நாளும் துக்கம் கடைப்பிடித்து வந்தவர்களுக்கு துக்கத்திலிருந்து விடுதலை அளிக்கும் நாளாகவே பதினேழாவது அல்லது முப்பத்தெறாவது நாளை முன்னோர்கள் தேர்ந்தெடுத்தனர்.
- அந்த நிகழ்ச்சிகளை செய்யும் பொறுப்பையும் மாமன், மைத்துனர்களின் கடமையாகக் கொண்டனர். எனவே இவ்விருதை சம்பத்திமார் விருந்து என்றும் கூறுவர்.
- 16ம் நாள் வரைக்கும் துக்கம் கடைப்பிடித்து வழக்கமான வாழ்க்கைக்கு செல்லும் ஒரு நிகழ்ச்சியாகவே 17ஆவது அல்லது 31வது நாளின் இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது. அன்று காலையிலிருந்து நண்பகளுக்குள் இது நடைபெற வேண்டும்.
- கொள்ளி இட்டவர்களுக்கு மைத்துனர்கள், முறை உள்ளவர்கள் எண்ணை அரப்பு புதுவேட்டி, துண்டு முதலியன வாங்கி வர வேண்டும் கொள்ளியிட்டவரும் வெறும் உடன் பிறந்தவர்களும் எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும்.
- குளித்து முடித்தவுடன் முறை உள்ளவர்கள் புதுவேட்டி தந்து அணிந்து கொள்ளச் செய்ய வேண்டும்.
- பிறகு படையலிட்டு உறவுமுறையுள்ளோர் தூபதீபம் காட்டி திருநீறு அணிய வேண்டும்.
- அதன் பிறகு அனைவரும் உணவு பரிமாற வேண்டும்.
- இந்த எண்ணெய் நீராடல் நிகழ்ச்சியின் போது, சம்பந்தி மாறாகவும் மைத்துனர்மாராக உள்ளவர்களுமே உணவுக்கு ஏற்பாடு செய்வது வழக்கம்.
- அம் மாதிரி உறவு உள்ளவா்களே, கொள்ளி வைத்தவர் குளித்து வந்தவுடன் வேட்டியும் துண்டும் தருவதுடன் உட்காரவைத்து தலையில் தலைப்பாகையும் கட்டுவர்.
அபரக்கிரியை என்றால் என்ன?
- ஒரு மனிதன் இறந்த பிறகு அவனுடைய ஆன்மா நலம் பெறுற் பொருட்டு அவருடைய பிள்ளைகள் முதலானோர் செய்யும் கிரியையே அபரக் கிரியை ஆகும்.
- அபரம் என்றால் பிந்தியது என்று பொருள் பிள்ளைகள் செய்யும் இக் கிரியை இறந்தவரை ஈடு ஏற்கின்றது.
- புத் என்னும் நகரத்தில் தந்தை விழாத படி கரையேற்றுவதனாலேயே பிள்ளைகளுக்கு“புத்ரன்” – புத்திரன் என்ற பெயர் வந்தது.
இதனாலேயே திருவள்ளுவர்,
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
(குறள்) எனக் கூறியுள்ளார்.
தம்தம் வினையான் வரும்.
- இறந்தவர்களுக்குப் பிள்ளைகள் செய்யும் கிரிகைகள் அவர்களுக்குத் சாந்தி அளிக்கின்றன.
- ஆதலால் தாய் தந்தையருக்கு அவர்கள் இறந்த பிறகு செய்ய வேண்டிய கடமைகளை பிள்ளைகள் முரண்பாடின்றி செய்தல் வேண்டும். அதுவே அபரக் கிரியையாகும்.
- அந்த அபரக்கிரியை அந்தியேட்டி, அஸ்தி சஞ்சயனம், பாஷாண பூஜை, சிரார்த்தம் என நான்கு வகைப்படும்.
அந்தியேட்டி
- அந்திய+ இட்டி = அந்தியேட்டி, மனித வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் செய்யப்படும் யாகம் ஆன்ம சுத்திகாகச் செய்யப்படும்.
- சமயம் அனுஷ்டானங்களில் உண்டான குறைகள் அனைத்தும் இதனால் நீங்கும்.
அஸ்தி சஞ்சயனம்
- அஸ்தியும் சஞ்சயனம் என்பதற்கு எலும்பைச் சேகரித்தல் என்பது பொருள்.
- உடலை எரித்த பின் எலும்புகளையும் சாம்பல் களையும் எடுத்து புண்ணிய நீரில் இதில் கரைத்து விடுவது.
பாஷாண பூஜை
- உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாவை ஒரு கல்லில் ஆவாஹித்துப் பூசிப்பது. புண்ணியத்திற்காக தானம், திருப்திக்காக தர்ப்பணம் செய்வது.
சிரார்த்தம்
- சிரத்தையுடன் செய்யப்படுவதே சிரார்த்தம் ஆகும்.
- பித்ருக்கள் இறந்த நாளில் அவர்களின் மேல்க்கதிக்காக பிள்ளைகள் சிரத்தையுடன் செய்யும் கிரியை சிரார்த்தம் எனப் பொருள்படும்.
- மனித வாழ்வு பிறந்தது முதல் இறப்பு வரையில் தான் என பலர் கருதுகின்றனர். ஆனால் நமது இந்து தர்மம் மனிதன் பிறப்பிற்கு முன்பும் பிறந்து வாழும்பொதும், இறந்த பின்பும், அவ் வாழ்வு உண்டு என வலியுறுத்தி அதற்குரிய கிரியைகளை வகுத்துள்ளது.
- அக் கிரியைகளை தவறாது ஒவ்வொரு இந்துவும் கைக்கொண்டு ஒழுகித் தாங்களும் தங்கள் முன்னோர்களையும் கடைத்தேற்ற வேண்டும் இது அவசியமானதொன்றாகும்.
தொடரும்…
- ஜீவசங்கரிகட்டுரை தொடற்சியை வருகின்ற நாட்களிலும் எதிர்பார்க்கலாம். திருத்தங்கள் பின்னூட்டங்கள் இருப்பின் தெரிவிக்கத் தயங்க வேண்டாம்.
ஏனெனில் மரபு வழி மரணகிரியை முறைகள் நாளுக்கு நாள் எமது பகுதியில் அழிந்து கொண்டு வருவதை அனைவரும் உணர்ந்திருப்பீர்களென நம்புகிறேன். தொடர்புகளுக்கு mattuweb@gmail.com எனும் மின்னஞ்சலை பயன்படுத்தவும்.
அல்லது mattakalappu.com எனும் முகப்புத்தகத்தில் தொடரவும்.
-மட்டுநகர்_ திவா
- மரபுவழி மரணகிரியைகள் பதிவுகளின் தொகுப்பு
-மட்டக்களப்பு இணையம்


